Latestமலேசியா

பேராக்கில், சொந்த தாயை குத்தி காயம் விளைவித்த ஆடவனுக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை

தெலுக் இந்தான், நவம்பர் 30 – போதைப் பொருள் வாங்க வெறும் பத்து ரிங்கிட் பணம் தர மறுத்த தனது தாயை குத்தி காயம் விளைவித்த, செம்பனை தோட்ட தொழிலாளி ஒருவனுக்கு, பேராக், தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

29 வயது சாய் சொன் தாக் எனும் அவ்வாடவன், தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து, மாஜிஸ்திரேட் தி. அஸ்வினி அவனுக்கு அந்த தண்டனையை விதித்தார்.

அவ்வாடவன் வேண்டுமென்றே தனது 50 வயது தாயார் இயூ யொக் செங்கை காயப்படுத்தியதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தான்.

கடந்த திங்கட்கிழமை, மாலை மணி மூன்று வாக்கில், தாமான் லங்காப் ஜெயாவிலுள்ள, DAP அலுவலக கட்டடத்தில் அவன் அக்குற்றத்தை புரிந்துள்ளான்.

அதுப்போன்ற தாக்குதல் அடிக்கடி நிகழ்வதால், சுய பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்ட அந்த தாய் போலீஸ் புகார் செய்ததை தொடர்ந்து, அவ்வாடவன் கைதுச் செய்யப்பட்டான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!