![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/WhatsApp-Image-2024-05-31-at-8.26.02-PM-700x470.jpg)
பொந்தியான், ஜூன்-1 – ஜொகூர், பொந்தியானில் மே 21 முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஆடவர், 10 நாட்களுக்குப் பிறகு காரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Parit Baru Kayu Ara Pasong எனுமிடத்தில் கோழி கூண்டின் முன்புறம் நின்றிருந்த காரினுள் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் அச்சடலம் கண்டெடுக்கப்பட்டது.
ஓட்டுநர் இருக்கையில், 31 வயது அவ்வாடவரின் உடல் அழுகத் தொடங்கிய நிலையில் மீட்கப்பட்டதை வைத்தும் பார்க்கும் போது, அவர் இறந்து சில நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீஸ் நம்புகிறது.
இறந்தவரின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சடலத்தை அடையாளம் காண பொந்தியான் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தகவல் தெரிந்த பொது மக்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புக் கொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.