![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-29-Nov-2023-01-52-PM-7553.jpg)
ஜொகூர் பாரு, நவ 29 – போதைப் பொருள் பதனீடு கூடம் மற்றும் மதுபான கடத்தல் கும்பலை முறியடித்த ஜொகூர் போலீசார் டத்தோ பிரமுகர் ஒருவர் உட்பட ஐவரை கைது செய்தனர். திங்கட்கிழமையும் நேற்றும் பாசீர் கூடாங் மற்றும் ஜொகூர் பாருவில் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் போலீஸ் தலைவர் டத்தோ கமருல் ஸாமான் மாமட் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பாசீர் கூடாங் , தாமான் பாசீர் பூத்தேவிலுள்ள தொழில்மய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் வரி செலுத்தப்படாத 5.53 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
அந்த நடவடிககையின்போது போதைப் பொருளை பதனிடு செய்வதற்கான சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்ட தகவலையும் அவர் வெளியிட்டார். அந்த பரிசோதனையின்போது இரண்டு வெளிநாட்டினர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து மற்றொரு இடத்தில் மேற்கொள்ளப்பட்ட இதர இரண்டு பரிசோதனைகள் மூலம் டத்தோ பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக ஸ்ரீ ஆலம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கமருல் ஸாமான் தெரிவித்தார்.