![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-10-Nov-2023-10-18-AM-6861.jpg)
ஷா அலாம், நவ 10 – மிகப் பெரிய அளவில் செயல்பட்ட போதைப் பொருள் விநியோகிக்கும் கும்பலை முறியடித்த போலீசார் 10.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஹுசைன் ஒமர் கான் தெரிவித்திருக்கிறார். கிள்ளான் மற்றும் சுங்கை பூலோ வட்டாரங்களில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 10 ஆடவர்கள் கைது செய்யப்பட்டதோடு கஞ்சா, ஹெரோய்ன் போன்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
இதுதவிர நான்கு டொயோட்டா வெல்ஃபயர் வாகனங்கள் ,ஹோண்டா ஸ்ட்ரீம், ஹோண்டா சிட்டி ஆகிய இரு கார்கள் மற்றும் 269,000 ரிங்கிட்டிற்கும் கூடுதல் தொகையையைக் கொண்ட வங்கி சேமிப்பு புத்தகமும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட உள்நாட்டை சேர்ந்த 10 சந்தேகப் பேர்வழிகளும் 18 முதல் 44 வயதுடையவர்கள் என அவர் கூறினார்.