![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-08-Dec-2023-12-51-PM-1543.jpg)
புத்ராஜெயா, டிசம்பர் 8 – போத்தல் சமையல் எண்ணெய்யின் விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்க்கை செலவினத்தை குறைக்கவும், விலைவாசி உயர்வுப் பிரச்சினையை சமாளிக்கவும் ஏதுவாக, உள்நாட்டு வாணிப, வாழ்க்கை செலவின அமைச்சு அந்நடவடிக்கையை அறிவித்துள்ளது.
அதோடு, நியாயமற்ற விலை உயர்வால், பயனீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் அது உறுதிச் செய்யும்.
அதனால், போத்தலில் விற்கப்படும் ஒரு கிலோகிராம் சமையல் எண்ணெய்யின் விலை ஆறு ரிங்கிட் 90 சென்னாகவும், இரண்டு கிலோகிராம் சமையல் எண்ணெய்யின் விலை 13 ரிங்கிட் 30 சென்னாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
மூன்று கிலோகிராம் சமையல் எண்ணெய் தொடர்ந்து 19 ரிங்கிட்டுக்கும், ஐந்து கிலோகிராம் சமையல் எண்ணெய் 30 ரிங்கிட் 90 சென்னுக்கும் விற்கப்படும்.
அந்த உச்சவரம்பு விலையை மீறி சமையல் எண்ணெய்யை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக, ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் ரிங்கிட் வரையில் அபராதம் அல்லது மூன்றாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.