Latestஉலகம்

போர்த்துகலில் விமான கண்காட்சியில் இரு விமானங்கள் மோதிக் கொண்டன; விமானி மரணம்

லிஸ்பன், ஜூன் 3 – போர்த்துகலில் தென் பகுதியில் நடைபெற்ற விமான கண்காட்சியில் இரண்டு சிறு விமானங்கள் வான் பகுதியில் மோதிக்கொண்ட விபத்தில் விமானி ஒருவர் மரணம் அடைந்தார்.

அந்த கண்காட்சியில் ஆறு விமனாங்கள் ஈடுபட்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக போர்த்துகல் விமானப் படை அதிகாரி ஒருவர் வெளியிட்ட அறிக்கையில் தெரவித்தார்.

பேஜாவான் கண்காட்சியில் நேற்று மாலை மணி 4.05 அளவில் அந்த விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

விபத்தில் இறந்த விமானி ஸ்பெய்ன் நாட்டை சேர்ந்தவர் ஆவார். காயம் அடைந்த போர்த்துகல் விமானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விமான கண்காட்சிகளில் சாகசங்களில் ஈடுபடும் ‘Yark Star’ குழுவைச் சேர்ந்த ஆறு விமானங்களில் போர்த்துகல் மற்றும் ஸ்பெய்ன் விமானிகள் இருந்ததனர்.

இதனிடையே இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என போர்த்துகல் தற்காப்பு அமைச்சர் நுனோ மெலோ ( Nuno Melo) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!