Latestமலேசியா

போலீஸ்காரரை திட்டிய நிறுவன நிர்வாகிக்கு 3,000 ரிங்கிட் அபராதம்

ஷா அலாம், ஏப் 22 – நான்கு ஆண்டுகளுக்கு முன் போலீஸ்காரரின் கடமைக்கு தடையாக இருந்தது மற்றும் அந்த போலீஸ்காரரை தகாத வார்த்தையினால் திட்டிய இரண்டு குற்றங்களுக்காக நிறுவனத்தின் நிர்வாகியான Paramver Singh Bullaveer Singh என்பவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி மாலை 5மணியளவில் புக்கிட் ஜெலுத்தோங் போலீஸ் நிலையத்தில் 38 வயதுடைய Paramver Singh இக்குற்றத்தை புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு மாஜிஸ்திரேட் Farah Roslan இந்த அபராத தொகையை விதித்தார். முதல் குற்றத்திற்கு 2,800 ரிங்கிட் அபராதமும் இரண்டாவது குற்றத்திற்கு 200 ரிங்கிட் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த அபராத தொகையை செலுத்தத் தவறினால் முதல் குற்றத்திற்கு மூன்று மாத சிறை மற்றும் இரண்டாவது குற்றத்திற்கு ஒரு மாதம் சிறை தண்டனையை Paramver Singh அனுபவிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து Paramver singh தமக்கு எதிரான அபராத தொகையை செலுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!