![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-31-May-2024-09-13-AM-7752.jpg)
கோலாலம்பூர், மே-31, ஏழாண்டுகளுக்கு முன் போலீஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்த S. பாலமுருகனின் குடும்பத்துக்கு 3 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாலமுருகனின் மரணத்துக்கு போலீசும் அரசாங்கமுமே பொறுப்பேற்க வேண்டும் என 2022, ஆகஸ்டில் தீர்ப்பளித்திருந்த உயர்நீதிமன்றம், இழப்பீடு தனித்தனியாக வழங்கப்பட வேண்டும் என அறிவித்தது.
அதன்படி, பொது இழப்பீடு, மோசமான இழப்பீடு என தனித்தனியாக இழப்பீடு வழங்க உத்ரவிடப்பட்டுள்ளது.
பாலமுருகன் 2017-ஆம் ஆண்டு வட கிள்ளான் போலீஸ் நிலைய லாக்கப்பில் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்தார்.
அவரின் உடலில் 20 விதமான காயங்கள் கண்டறியப்பட்ட வேளை, கூர்மையற்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் Artery coronary பாதிப்பு ஏற்பட்டே அவர் மரணமடைந்ததாக உடற்கூறு நிபுணர்கள் உறுதிபடுத்தியிருந்தனர்.
இதையடுத்து அவரின் கைது செல்லாது, கவனக்குறைவாகச் செயல்பட்டது, அடித்துத் துன்புறுத்தியது உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து அவரின் குடும்பத்தினர் 2020-ல் வழக்குத் தொடுத்திருந்தனர்.
4 போலீஸ் அதிகாரிகள், தேசியப் போலீஸ் படைத்தலைவர் மற்றும் மலேசிய அரசாங்கம் பிரதிவாதிகளாக அதில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.