Latestமலேசியா

மஇகா தேசியத் தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தொடர்ந்து நீடிக்க வேண்டும் – கூட்டரசுப் பிரதேச மஇகா தலைவர் டத்தோ ராஜா

கோலாலம்பூர், மார்ச் 22 – மஇகா தேசியத் தலைவர் பதிவிக்கான வேட்புமனு தாக்கல் எதிர்வரும் மார்ச் 27 தேதி நடைபெறவுள்ளது.

அதன் அடிப்படையில், மஇகா கட்சியின் தேசியத் தலைவராக தொடர்ந்து டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்தான் நீடிக்க வேண்டும் என்று கூட்டரசுப் பிரதேச மஇகா தலைவர் டத்தோ ராஜா சைமன் கேட்டுகொண்டுள்ளார்.

இந்த தேர்தலில் கட்சியின் தேசியத் தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும் என இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மீண்டும் மஇகாவின் தலைவராக தேர்வு செய்யப்படுவதற்கு கூட்டரசுப் பிரதேச மஇகாவின் 220 கிளைகளும் முழு ஆதரவை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து, துணைத் தலைவருக்கான தேர்தல் நடக்கும் போது கூட்டரசுப் பிரதேச மஇகா கிளை டத்தோஸ்ரீ சரவணனுக்கும் ஆதரவு வழங்கும் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!