![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-04-Dec-2023-12-01-PM-9423.jpg)
கோலாலம்பூர், டிச 4 – சமீபத்தில் தன் மகளுக்கு கடையில் வாங்கிக் கொடுத்த பலாப்பழ பலகாரத்தில் இருந்த ஸ்டேப்ளர் பின்னால் தனது மகளின் நாக்கில் காயம் ஏற்பட்டுவிட்டதாக தாய் பகிர்ந்துக் கொண்ட பதிவு பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது.
பலகாரம் சாப்பிட்டுக் கொண்டிருந்த தனது மகளின் நாக்கு காயமடைந்ததைத் தொடர்ந்து, அந்த பழாப்பழ பலகாரத்தை சோதித்த போது அதில் நிறைய ஸ்டேபளர் பின்கள் இருந்ததை கண்டறிந்ததாக அந்த தாய் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது மகள் வளர்ந்துவிட்டதால் உணவை விழுங்குவதற்கு முன், அதில் இந்த பின் இருப்பதை கவனித்ததை நினைத்து மனநிம்மதி அடைவதாகவும் அந்த தாய் குறிப்பிட்டிருந்தார்.
“யாரும் வேண்டுமென்றே அவற்றை உள்ளே வைப்பதில்லை, ஆனால் அது தற்செயலாக இருந்தாலும், கவனக்குறைவால் நிகழ்ந்துள்ளது” என்றும் தனது பதிவில் அவர் எழுதியிருந்தார்.
இச்சம்பவம் எங்கு நிகழ்ந்தது என குறிப்பிடப்படாத நிலையில், உணவை விற்பவர்கள் உணவை தயாரிக்கும் போது கவனமுடன் செயப்பட வேண்டும் என வலைத்தளவாசிகள் கருத்து பதிவிட்டு வருவதோடு, தங்களுக்கு நேர்ந்த சில அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.