![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-09-Dec-2023-12-57-PM-1227.jpg)
புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கின் வளாகத்தில் நேற்றிரவு நடைபெற்ற மடானி ஒற்றுமை அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழா நிகழ்வில் 16,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். இன்று இந்த நிகழ்ச்சியில் சுமார் 200,000 பேர் கலந்துகொள்வார்கள் என தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் பாமி பாட்சில் தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்சிக்கு மக்கள் நேற்று சளைக்காமல் வந்துகொண்டிருப்பதன் மூலம் அவர்களின் வரவேற்பு அபரிதமானதாக இருந்ததாக அவர் கூறினார்.
மூன்று நாட்களுக்கு நடைபெறும் மடானி ஒற்றுமை அரசாங்கத்தின் கொண்டாட்ட நிகழ்வில் பல்வேறு நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நேற்று புதிய தலைக்கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டதோடு போக்குவரத்து குற்றப் பதிவு அபராத தொகைக்கான 50 விழுக்காடு கழிவும் வழங்கப்பட்டன. ஒற்றுமை அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்த பல்வேறு விளக்கங்கள் மக்களுக்கு வழங்கப்படுவதோடு பல திட்டங்கள் தொடர்பான கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாமி பாட்சில் தெரிவித்தார்.