Latestமலேசியா

மனித உரிமைகளை மையமாகக் கொண்ட நடைமுறைகள் வெளிநாட்டு முதலீட்டுக்கு அவசியம்; ஐ.நா வலியுறுத்து

கோலாலம்பூர், மே 5 – வர்த்தக நடைமுறையில் மனித உரிமைகள் சார்ந்து இல்லாவிட்டால், வெளிநாட்டு முதலீட்டை நாட்டிற்குள் ஈர்க்கும் முயற்சிகள் பாதிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் நடைபெற்ற சந்திப்பின் போது வணிகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டதாக மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க் (Volker Turk) தெரிவித்தார்.

இதனிடையே, அடுத்த ஆண்டு ஆசியான் தலைமை பதவிக்கு வரும்போது, ஆசியாவில் மனித உரிமைகள் வலுப்படுத்த மலேசியாவின் தலைமைக்காக தனது தரப்பு காத்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.

இது குறித்து பிரதமரிடமும் இந்த விவகாரம் வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஆசியான் தலைவராக மலேசியாவின் தலைமைப் பதவி, உலகின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முக்கியமாகும் என நம்புவதாக, நேற்றிரவு வோல்கர் டர்க் (Volker Turk) தனது மலேசியப் பயணத்தின் போது, புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!