![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-19-Feb-2024-01-37-PM-9511.jpg)
பாப்பார், பிப் 19 – இந்த வெள்ளிக்கிழமை நடைபெறும் வாழக்கை செலவினம் மீதான தேசிய நடவடிக்கை மன்ற சிறப்புக் கூட்டத்தில் மலேசிய அரிசி விநியோகம் குறித்து விவாதிக்கப்படும் என உள்நாட்டு வாணிக வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோ அர்மிசன் மோஹட் அலி தெரிவித்திருக்கிறார். வாழ்க்கை செலவினம் மீதான தேசிய நடவடிக்கை மன்றத்தின் செயலகமாக செயல்படும் தமது அமைச்சு அரிசி விநியோயம் தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்படும் என விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். அந்த சிறப்பு கூட்டத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்கவிருக்கிறார்.