Latestமலேசியா

மலேசிய கடற்படையின் இரு ஹெலிகாப்டர்கள் விபத்து தொடர்பில் அடுத்த வாரம் முழு அறிக்கை வெளியிடப்படும்

சுங்கை பூலோ, மே 28 – 10  பேர் உயிர் இழப்பதற்கு காரணமாக  இருந்த  மலேசிய கடற்படையின்  இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானது குறித்த   முழுமையான அறிக்கை  அடுத்த வாரம் வெளியிடப்படும்.  கடந்த ஏப்ரல் மாதம்  23 ஆம் தேதி நிகழ்ந்த அந்த விபத்து குறித்த  அறிக்கை தற்போது    தயாராகிவருவதாகவும்   அடுத்த வாரம்   இந்த அறிக்கை  அறிவிக்கப்படும் என  தற்காப்பு அமைச்சர்  டத்தோஸ்ரீ    Mohamed Khaled   தெரிவித்தார். அடுத்த வாரத்தில் முழுமையான அறிக்கையை   நாங்கள் வெளியிடுவோம் என அவர்  கூறினார். 

 சுங்கை பூலோ முகாமில்  மலேசிய தொழில்   திறன் பயிற்சியை முடித்தவர்களுக்கு  டிப்ளோமா  வழங்கும்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர்  இத்தகவலை வெளியிட்டார்.  இந்த நிகழ்வில் மலேசிய ராணுவ உறுப்பினர்களில்  209பேரும்   ஓய்வு பெற்ற   338 முன்னாள் ராணுவ வீரர்களும்    மலேசிய தொழில்  திறன் டிப்ளோமா சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!