மலேசிய கிண்ண இறுதியாட்டத்திற்கு புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கம் 90 விழுக்காடு தயாராகிவிட்டது
![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-07-Dec-2023-03-45-PM-7932.jpg)
கோலாலம்பூர், டிச 7 – நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்க மைதானம் 90 விழுக்காடு தயாராகிவிட்டது. அந்த மைதானம் மிகவும் மோசமாக இருந்ததால் அதன் தரம் குறித்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையான குறை கூறலை தெரிவித்து வந்தனர். எனினும் மலேசிய கிண்ண இறுதியாட்டத்திற்கு தயாராகும் பொருட்டு புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கின் மைதானத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பழுதுபார்க்கும் பணியில் தீவிர கவனம் செலுத்தப்பட்டதாக PSM எனப்படும் “Perbadanan Stadium Malaysia” தெரிவித்தது.
அந்த மைதானத்தில் மலேசிய காற்பந்து லீக் தரப்பு மற்றும் இதர பல தரப்புகளுடன் சேர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக “Perbadanan Stadium Malaysia” அறிவித்தது. தற்போது மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் இறுதியாட்டத்தை புக்கிட் ஜாலில் மைதானத்தில் நடத்துவதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லையென மலேசிய விளையாட்டரங்க கழகம் தெரிவித்துள்ளது.