![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/china.jpg)
பெய்ஜிங், மே 31 – மலேசியாவிலிருந்து சீனாவிற்கு செல்லும் சுற்றுப் பயணிகளின், விசா விலக்குகான கால அவகாசத்தை 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக நீட்டிக்க சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மா சாயிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
புறநகர் வட்டார மேம்பாட்டு அமைச்சருமான சாயிட், மலேசியாவுக்கும் சீனாவுக்கு இடையிலான 50 ஆண்டு கால அரச தந்திர நிறைவு விழாவில் கலந்து கொண்டு உறையாற்றிய போது அதனை அறிவித்தார்.
நேற்று சீன பிரதமர் லீ கியாங்குடனான சந்திப்பின் போது, அந்த விசா நீட்டிப்பு தொடர்பில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாகவும் துணைப் பிரதமர் சொன்னார்.
மலேசியாவுக்கு வருகை புரியும் சீன சுற்றுப் பயணிகளுக்கு 30 நாட்கள் விசா விலக்கு அளிக்கப்படுகிறது. அதே சலுகை சீனாவுக்கு செல்லும் மலேசிய சுற்றுப்பயணிகளுக்கும் வழங்கப்படும் என்றாரவர்.
எனினும், இரு நாடுகளுக்கும் இடையில் அது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தான உடன், அந்த 30 நாட்கள் விசா விலக்கு சலுகை அமலுக்கு வருமென துணைப் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.