கோலாலம்பூர், மே-18 – கோலாலம்பூர், Jalan Sultan Abdul Halim சாலையில் அமைந்துள்ள தேசிய அரண்மனையில் அத்துமீற முயன்ற இரு உள்ளூர் ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.
நேற்று மாலை 4.40 மணியளவில் இஸ்தானா நெகாராவின் பின்பக்க வாசலின் மூன்றாவது கதவு வழியாக Perodua Kembara கார் நுழைவதைப் போலீஸ் கண்டிருக்கிறது.
அக்காரை நிறுத்தி விசாரித்ததில், மாமன்னரைச் சந்திக்கப் போய்க் கொண்டிருப்பதாக அதிலிருந்த ஆடவர்கள் மிகவும் சர்வ சாதாரணமாக பதிலளித்துள்ளனர்.
சந்தேகத்தில் அக்காரைச் சோதனையிட்டதில், அதில் ஒரு பாராங் கத்தி இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியுற்றனர்.
இதையடுத்து உடனடியாகக் கைதுச் செய்யப்பட்ட 29 மற்றும் 37 வயது ஆடவர்கள், விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.