![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-28-Nov-2023-03-26-PM-2932.jpg)
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 28 – கெடா, சுங்கை பெட்டாணியிலுள்ள, தங்கும் விடுதி ஒன்றுக்கு கீழ், ஆடவன் ஒருவன் கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை அறுவர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான 42 வயது ஆடவன், அந்த அறுவரில் ஒருவரது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததே அந்த தாக்குதலுக்கு காரணம் என நம்பப்படுகிறது.
அதனால், சம்பந்தப்பட்ட ஆடவன், தலை, முகம் மற்றும் வலது கால் தொடைப் பகுதியில் காயங்களுக்கு இலக்கானான்.
ஆடவன் ஒருவன் கும்பலால் தாக்கப்படுவது தொடர்பில், நேற்று பிற்பகல் மணி ஒன்று வாக்கில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக, குவாலா மூடா போலீஸ் தலைவர் ஜைடி செ ஹசான் தெரிவித்தார்.
அச்சம்பவம் தொடர்பில், பின்னர் 16 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்ட அறுவர் கைதுச் செய்யப்பட்டு, விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
அவர்களுக்கு எதிராக பழைய குற்றப்பதிவுகள் இருக்கும் வேளை; தாக்குதலுக்கு இலக்கான ஆடவனுக்கு எதிராக ஏழு பழைய போதைப் பொருள் குற்றப்பதிவுகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.