கோலாலம்பூர், நவ 8- 1MDB ஊழல் விவகாரம் வெளியானது முதல் முன்னாள் பிரதமர்களான டத்தோஸ்ரீ நஜீப் மற்றும் டாக்டர் மகாதீருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் ஒதுங்கியிருந்த பெர்சத்துவின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மீண்டும் அவர்களுடன் இணைந்து செயல்படும் சாத்தியத்தை அக்கட்சியின் தலைவர் ஒருவர் மறுக்கவில்லை. நம்பிக்கைகை மோசடி மற்றும் அதிகார வரம்பு மீறல் குற்றங்களுக்காக 12 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டதான் மூலம் நஜீப் ஏற்கனவே தண்டிக்கப்பட்டு விட்டார். நஜீப்பை தொடர்ந்து எதிரியாக கருதும் திட்டத்தை முஹிடின் கொண்டிருக்கவில்லை.
மகாதீர் உட்பட எவருடனும் இணைந்து பணியாற்றுவதற்கு முஹிடின் தயாராய் இருப்பதாக பெர்சத்து தகவல் பிரிவின் தலைவர் ரசாலி இட்ரிஸ் தெரிவித்திருக்கிறார். இவ்வாண்டு தொடக்கத்தில் அரசியல் சிந்தாந்தம் வேறுபாடு இன்றி மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்துவதற்கான மலாய் பிரகடனம் தொடர்பில் முஹிடின் டாக்டர் மகாதீரை சந்தித்துள்ளதையும் ரசாலி இட்ரிஸ் சுட்டிக்காட்டினார். மகாதீர் , முஹிடின் மற்றும் நஜீப் ஆகியோருக்கிடையே ஒத்துழைப்பு ஏற்படும் என மூன்று நாட்களுக்கு முன் ரசாலி தமது முகநூலில் பதிவிட்டிருந்தார்.