Latestமலேசியா

மூவாரில் ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு; கட்டுப்பாட்டை இழந்த கார் மருத்துவமனையில் மோதியது

மூவார், ஜூன் 8 – கார் ஓட்டிக்கொண்டிருந்தபோது அதன் ஓட்டுனர் திடீரென வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டதால் அக்கார் கட்டுப்பாட்டை இழந்து ஜோகூர் சுல்தானா பாத்திமா நிபுணத்துவ மருத்துவனையில் மோதியது. நேற்றிரவு 10.15 மணியளவில் நிகழ்ந்த அந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. எனினும் இந்த சம்பவத்தில் சுல்தானா பாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையின் பணியாளர்கள் எவரும் காயம் அடையவில்லை.

அந்த மருத்துவமனையின் கூரை மற்றும் ஓடுகளை தற்போது சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்ததால் இச்சம்பவத்தினால் கட்டிடப் பகுதியில் சேதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இச்சம்பவத்தை அந்த மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அந்த கார் பின்னர் மருத்துவமனை வளாகத்திலிருந்து இழுத்து செல்லப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!