Latestமலேசியா

மூவாரில், மாற்றான் தந்தையால் மாற்றுதிறனாளி கற்பழிப்பு; உடந்தையாக இருந்ததாக தாய் ஒப்புதல்

மூவார், டிசம்பர் 11 – ஈராண்டுகளுக்கு முன், ஆவிகளால் தொல்லைக்கு இலக்கான தனது சொந்த மகளுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி, கணவர் அவரை கற்பழிக்க உடந்தையாக இருந்த குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட தாய் ஒருவருக்கான தண்டனை, அடுத்தாண்டு ஜனவரியில் அறிவிக்கப்படுமென, மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தெரிவித்தது.

அந்த வழக்கு தொடர்பான தகவல்களை தயார் செய்ய தங்களுக்கு கால அவகாசம் வேண்டுமென, அரசாங்க தரப்பு வழக்கறிஞர் கோரியதை தொடர்ந்து, நீதிபதி அந்த முடிவை அறிவித்தார்.

2021-ஆம் ஆண்டு, இரவு நேரத்தில், வீட்டிலுள்ள தனது அறையில், அப்பொழுது 17 வயதே நிரம்பிய தனது சொந்த மகளை, கணவர் கற்பழிக்க உடந்தையாக இருந்ததாக, 41 வயதான அப்பெண்ணுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 30 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், பத்து பிரம்படிகளும் விதிக்க, குற்றவியல் சட்டம் வகைச் செய்கிறது.

இந்நிலையில், தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை அப்பெண் ஒப்புக் கொண்டதை அடுத்து, அவருக்கான தண்டனை அடுத்தாண்டு ஜனவரி 30-ஆம் தேதி அறிவிக்கப்படுமென நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில், அந்த பெண் மற்றும் அவரது கணவருக்கு எதிரான தடுப்புக் காவலையும் நீதிமன்றம் இன்று நீட்டித்து உத்தரவிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!