மெர்சிங், நவ 28 – மெர்சிங்கிற்கு அருகே ஜாலான் பென்யாபோங்கில் சாலையை கடந்த மூன்றாம் படிவ மாணவியை நான்கு சக்கர வாகனம் ஒன்று மோதியதில் அம்மாணவி இறந்தார். பள்ளி முடிந்து பஸ்ஸில் வீடு திரும்பியபோது நிகழ்ந்த விபத்தில் 15 வயதுடைய அந்த மாணவி இறந்ததார் என மெர்சிங் OCPD சூப்பிரடண்ட் அப்துல் ரசாக் தெரிவித்தார். மழை தூறிக்கொண்டிருந்தபோது பென்யாபோங்கிலிருந்து எண்டாவ்க்கு சென்று கொண்டிருந்த டொயோட்டா ஹிலக்ஸ் வாகனத்தை ஒட்டிச் சென்ற ஆடவர் ஒருவர் அந்த மாணவியை மோதியதாக கூறப்பட்டது. திடீரென அந்த மாணவி சாலையை கடந்ததால் அந்த வாகன ஓட்டுனர் உடனடியாக பிரேக் வைக்க முடியாத காரணத்தினால் அவரை மோதியதாக அப்துல் ரசாக் கூறினார். தலையில் கடுமையாக காயம் அடைந்த நிலையில் மெர்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவி இரவு மணி 10.24 அளவில் இறந்தார்.
Related Articles
தென் கொரியாவை வட கொரியா என தவறுதலாக அறிவிப்பு செய்ததற்காக வருத்தம் தெரிவித்த ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள்
9 mins ago
செப்டம்பரில் தான் மழைக்காலம்; அதுவரை தண்ணீர் பயன்பாட்டை 10% குறைத்துக் கொள்ள பினாங்கு மக்களுக்கு அறிவுறுத்து
58 mins ago