![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-03-Dec-2023-12-21-PM-8089.jpg)
ஷா அலாம், டிச 3 – ஓப் சாம்செங் ஜாலானன் எனப்படும் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு எதிராக நேற்றிரவு போக்குவரத்து போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையில் 12 வயது சிறுமி கைது செய்யப்பட்டார். அந்த சிறுமி கிள்ளானிலிருந்து ஷா அலாமிற்கு தனியாக மோட்டார் சைக்கிளோட்டி வந்தபோது கைது செய்யப்பட்டதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் விசாரணை மற்றும் போக்குவரத்து அமலாக்க பிரிவின் துணைத் தலைவர் சுப்ரிடெண்டன்ட் SH ரோஸ்லீ SH முகமட் நோரானி தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டிச் செல்வதற்கு தமது தாயார் அனுமதி வழங்கியதாகவும் ஆனால் கிள்ளான், பாயு பெர்டானாவில் வசித்து வரும் தாம் அங்கிருந்து தமது நண்பர்களுடன் ஷா அலாம் வரை தனியாக மோட்டார்சைக்கிள் ஓட்டி வந்தது தெரியாது என அந்த சிறுமி தெரிவித்தார். இதனிடையே நேற்றிரவு 11.30 மணியிலிலிருந்து அதிகாலை 2 மணிவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது 43 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு பல்வேறு குற்றங்களுக்காக 185 குற்றப் பதிவுகள் வழங்கப்பட்டதாக ரோஸ்லீ முகமட் தெரிவித்தார்.