Latestமலேசியா

ரமலான் சந்தையில் எதிர்பாரா விபத்து; கொதிக்கும் எண்ணெய் கொட்டி வியாபாரி படுகாயம்

ஜெலபு, மார்ச்-15, நெகிரி செம்பிலான் ஜெலபுவில் ரமலான் சந்தையொன்றில் நிகழ்ந்த எதிர்பார விபத்தில், சட்டியில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய் கொட்டி வியாபாரியின் உடல் வெந்துப் போனது.

குவாலா கெலாவாங் ரமலான் சந்தையில் தான் செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

எஞ்சின் அடைக்கப்படாமல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்று திடீரென நகர்ந்து அங்காடி கடையை மோதியிருக்கிறது.

இதனால் எண்ணெய் கொதித்துக் கொண்டிருந்த சட்டி வியாபாரி மீது கொட்டி, அதில் 40 வயது அவ்வாடவருக்கு முதுகு, தொடை மற்றும் இடது கெண்டை கால் என உடலில் 25% பகுதிகள் வெந்துப் போயின.

சம்பவத்தின் போது பெற்றோர் பாதுகாப்பின்றி, இரு சிறார்கள் மட்டுமே காருக்குள் இருந்திருக்கின்றனர்.

காரை விட்டுச் செல்லும் போது எஞ்சினை நிறுத்தத் தவறியதன் பேரில் அவர்கள் விசாரிக்கப்படுவதாக போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!