Latestமலேசியா

ரி.ம 4.34 மில்லியன் கடத்தல் சிகரெட்டுகள் மதுபானங்கள் பறிமுதல்

கோலாலம்பூர், மார்ச் 13 – சிலாங்கூரில் பல இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையில் 4.34 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய கடத்தல் சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள கிடங்கு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 160,000 ரிங்கிட் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றின் மொத்த சுங்க வரி மதிப்பு 1.33 மில்லியன் ரிங்கிட் என தெரிவிக்கப்பட்டது. பிப்ரவரி 29 ஆம் தேதியன்று கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் லோரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது அதிலிருந்து 392,000 ரிங்கிட் மதிப்புடைய சிகரெட்டுக்கள் செய்யப்பட்டதாகச் சுங்கத் துறையின் அமலாக்கப் பிரிவுக்கான துணை தலைமை இயக்குனர் டத்தோ சசாலி முகமட் தெரிவித்தார்.

‘West Port’-ட்டில் இரண்டு கொள்கலன்களை தடுத்து நிறுத்திய சுங்க அதிகாரிகள் மேலும் 20 லட்சம் சிகரெட்டுகள் மற்றும் 225 லிட்டர் மதுபானங்களுளையும் பறிமுதல் செய்தனர்.

அந்த கொள்கலன்கள் அண்டை நாட்டிலிருந்து வந்தவை என்று தங்களது விசாரணையில் தெரியவந்ததாக அவர் கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் சுங்க வரி மதிப்பு 1.34 ரிங்கிட்டாகும் என அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!