![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-29-at-7.59.28-PM-1-780x470.jpeg)
ரெம்பாவ், மே 29 – போலீஸ் அதிகாரி ஒருவரின் கையை கடித்து, பணியை செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்திய, வேலையில்லா ஆடவன் ஒருவனுக்கு, நெகிரி செம்பிலான், ரெம்பாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஈராயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
37 வயது முஹமட் அஜ்லி கமருடின் எனும் அவ்வாடவன் தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து அவனுக்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத்தை செலுத்த தவறினால், அவன் ஐந்து மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமென, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி, நண்பகல் மணி 1.15 வாக்கில், ரெம்பாவ், செம்போங்கிலுள்ள வீடொன்றில், உளவு “கோப்ரல்” பதவி வகிக்கும் அரசாங்க பணியாளரின் பணிக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்தில், அவரது வலது கையை கடித்ததாக அவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தான்.
அதே சமயம், அதே நாளில் போதைப் பொருளை உட்கொண்டிருந்த குற்றச்சாட்டையும் அவன் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவனுக்கு ஈராயிரத்து 500 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
முன்னதாக, அவனது வீட்டை சோதனையிட சென்ற போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இடையூறை ஏற்படுத்தியதற்காக அவன் கைதுச் செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.