Latestமலேசியா

ரெம்பாவ்சமய பள்ளியில் வெடிகுண்டு புரளி; 500 மாணவர்கள் வெளியேற்றம்

ரெம்பாவ், நவ 22 – ரெம்பாவ் சமய பள்ளியும் நேற்று வெடிகுண்டு புரளிக்கு உள்ளானதைத் தொடர்ந்து அப்பள்ளியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த பள்ளியின் மின்அஞ்சல் மூலமாக அந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக ரெம்பாவ் OCPD துணை சூப்பிரடண்ட் ஹஸ்ரி முகமட் தெரிவித்தார். அந்த பள்ளியின் வளாகப் பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக மின்னஞ்சல் அனுப்பிய நபர் தெரிவித்திருந்ததார்.

இதனைத் தொடர்ந்து போலீஸ் மற்றும் மீட்பு குழுவினர் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டதோடு அந்த பள்ளி வளாகத்தில் பரிசோதனையில் ஈடுபட்டனர். மாநில போலீஸ் தலைமையகத்திலிருந்து வெடிகுண்டு அகற்றும் பிரிவினர் அந்த பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் அங்கு வெடிப்புக்கான எந்தவொரு பொருளையும் கண்டுப்பிடிக்கவில்லை. அதன்பிறகு மாணவர்களும் ஆசிரியர்களும் மீண்டும் பள்ளிக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டதாக ஹஸ்ரி முகமட் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!