
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – சிங்கப்பூருக்குள் வரி செலுத்தப்படாத 1,500 அட்டை சிகரெட்டுகளை கடத்த முயன்ற 39 வயதான மலேசியர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 11ஆம் தேதி துவாஸ் சோதனைச் சாவடியில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியை சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டபோது, பல்வேறு வகையான ரொட்டிகள் அடங்கிய சரக்குக்குள் சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நிலையில், கைப்பற்றப்பட்ட பொருட்கள் சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



