![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-11-Nov-2023-12-06-PM-294.jpg)
மலாக்கா, நவ 11 – லங்காவி தீவுக்கான சுற்றுப்பயணிகள் குறைந்ததைத் தொடர்ந்து அங்கு சுற்றுலா தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானபோதிலும் அத்தீவை தொடர்ந்து முக்கிய சுற்றுலா மையாக அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளை டூரிசம் மலேசியா எனப்படும் மலேசியா சுற்றுலா ஊக்குவிப்பு வாரியம் தீவிரப்படுத்தும்.
நாட்டின் பிரபலமான முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றாக லங்காவி தீவு இருப்பதால் அத்தீவை தொடர்ந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளிடையே அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் கவனம் செலுத்தப்படும் என மலேசிய சுற்றுலா ஊக்குவிப்பு வாரியத்தின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் அம்மார் அப்துல் காபார் தெரிவித்தார்.
இதுவரை வெளிநாடுகளில் உள்ள மலேசிய சுற்றுலா ஊக்குவிப்பு வாரியத்தின் அலுவலகங்கள் லங்காவி தீவு தொடர்பாக எந்தவொரு அதிருப்தி மற்றும் புகார்களை பெறவில்லையென அவர் கூறினார்.