Latestமலேசியா

லதா சங்கா (Lata Changkah) உல்லாச தளத்தில் நீர் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட தாயும் 7 வயது மகளும் காப்பாற்றப்பட்டனர்

செத்தியு , ஜூன் 3 – லதா சங்கா (Lata Changkah) உல்லாச தளத்தில் நீர்ப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட தாயும் அவரது ஏழு வயது மகளும் பொதுமக்களின் உதவியால் காப்பாற்றப்பட்டனர்.

தாங்கள் இருவருடன் சகோதரியும் நீர் பெருக்கினால் சுமார் 5 மீட்டர் துரம் அடித்துச் செல்லப்பட்டதாகவும் எனினும் உடனடியாக பொதுமக்கள் உதவியதால் காப்பாற்றப்பட்டதாக 30 வயதுடைய சித்தி அலியா முகமட் எப்பென்டி ( Siti Alia Mohd Affandi ) தெரிவித்தார்.

இச்சம்பவத்திற்கு முன்னதாக இரண்டு மற்றும் ஏழு வயது மகன்கள் மற்றும் என சகோதரியுடன் ஆற்றின் மறுபுறம் இருந்தோம். நாங்கள் நீரில் இறங்கி கடந்தபோது உடனடியாக கரையேறும்படி எனது உறவினரின் மகன் கூச்சல் போட்டார்.

நாங்கள் ஆபத்தில் சிக்கியபோதிலும் பொதுமக்களின் உதவியோடு காப்பாற்றப்பட்டோம் என சித்தி அலியா கூறினார். பொது பாதுகாப்பு படையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் மூலம் தனது இரண்டாவது மகன் காப்பாற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நீரில் அதிகமான குப்பைகள் அடித்து வந்ததாகவும் அதன்பின் அடுத்த சில நிமிடங்களில் நீர் பெருக்கு அதிகரித்ததாக சித்தி அலியா விவரித்தார். இதனிடையே லதா சங்கா (Lata Changkah) பகுதியில் நீர் பெருக்கின்போது அடித்துச் செல்லப்பட்ட அறுவர் காப்பாற்றப்பட்டதாக செத்தியு மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் துணை சூப்பிரிடண்டன் புர்ஹானுடின் முஸ்தபா கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!