![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-07-at-7.15.04-PM-1-780x470.jpeg)
கம்பார், மார்ச் 7 – கோப்பெங்கிற்கு அருகே வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து கம்பார் மாவட்ட காவல்துறைத் தலைவர், Superintenden முகமட் நஸ்ரி தாவுத் கூறுகையில், கோழிக் கூண்டுகளை ஏற்றிச் சென்ற லாரியும், பாறைகளை ஏற்றிச் சென்ற மற்றொரு லாரியும் விபத்தில் சிக்கியதாக கூறியுள்ளார்.
கோழி கூண்டு லாரி ஒட்டுநனரும் உடன் இருந்தவரும் லாரியின் இடுக்கில் சிக்கி உயிரிழந்தனர். பாறைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒட்டுநார் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், இரண்டு லாரிகளும் இடதுபுற பாதையில் சென்ற போது, கோழி கூண்டு லாரி, பாறையை ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறம் மோதியதாக கூறப்பட்டுள்ளது.