![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/WhatsApp-Image-2024-04-12-at-2.00.18-PM.jpeg)
கெரிக், ஏப்ரல் 12 – பேராக் கெரிக்கில் காட்டு யானை மிதித்து ஆடவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்றிரவு 7 மணி வாக்கில் Gerik – Jeli இடையிலான Jalan Raya Timur Barat சாலையின் Batu 11 அருகே அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
Felda Bersia-வைச் சேர்ந்த அவ்வாடவர், யானை மிதித்ததில் விலா எலும்பு மற்றும் இடது கால் எலும்பு முறிவுக்கு ஆளானதோடு, தலையிலும் ரத்தக் கசிவுக்கு உள்ளானார்.
பேராக் வன விலங்குப் பாதுகாப்புத் துறையின் பேச்சாளர் அதனை உறுதிபடுத்தினார்.
சம்பவ இடத்தில் 12 பேர் இருந்த போதும், வயிற்று உபாதையால் அவசரமாக ஆற்றுப் பக்கம் ஒதுங்கிய போது அவ்வாடவர் மட்டும் யானை மிதிக்கு ஆளானதாகத் தெரிகிறது.
காயங்களுடன் கெரிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்நபர் தற்போது மேல் சிகிச்சைக்காக ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.