![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/WhatsApp-Image-2024-04-12-at-1.59.09-PM-2-700x470.jpeg)
தெலுக் இந்தான், ஏப் 12 – வளர்ப்பு சகோதரியை காயப்படுத்திய குற்றச்சாட்டை லோரி உதவியாளர் ஒருவர் மறுத்தார். மாஜிஸ்திரேட் T Ashvinii முன்னிலையில் 52 வயதுடைய L. Thiyagaraj மீது குற்றஞ்சாட்டப்பட்டது. காய்கறி வெட்டும் கத்தியினால் 31 வயதுடைய L.Devi யை தாக்கி காயப்படுத்தியதாக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து அவர் விசாரணை கோரினார். Teluk Intan , Taman Muhibbahவிலுள்ள ஒரு வீட்டில் ஏப்ரல் 8 ஆம் தேதியின்று இரவு 8 மணியளவில் அவர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.
குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுக்கும் மேற்போகாத சிறைத் தண்டனை, பிரம்படி மற்றும் அவ்விரு தண்டனைகளும் வழங்கப்படும் தண்டனைச் சட்டத்தின் 324ஆவது மற்றும் 326 ஆவது விதியின் கீழ் Thyiyagaraj மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவருக்கு மூவாயிரம் ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு, அவர் மீதான குற்றச்சாடு மீண்டும் மே 9ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.