Latestமலேசியா

விழாக் காலத்தின்போது இறைச்சிக்காக மான் வேட்டை அதிகரித்தது

கோலாலம்பூர், ஏப் 12 – ஹரிராயா விருந்துக்காக சட்டவிரோதமாக வன விலங்குகளை குறிப்பாக மான்களை வேட்டையாடும் நடவடிக்கை அதிகரித்ததை வனவிலங்கு பூங்காத்துறை கண்டறிந்ததாக அத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ Abdul Kadir கூறினார். மான் இறைச்சிக்கான தேவை அதிகரித்ததை தொடர்ந்து அதற்கான சட்டவிரோத வேட்டையில் பலர் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். பலர் ஹரிராயா விருந்தின்போது மான் இறைச்சியை விருத்தினர்களுக்கு சமைத்து பரிமாறுவதற்கு ஆர்வமாக இருந்தனர். பொதுவாகவே விழாக்காலத்தின்போது மான் மற்றும் இதர வனவிலங்குகளை வேட்டையாடுவதில் பலர் ஆர்வமாக இருந்ததையும் தாங்கள் கண்டதாக Abdul Kadir சுட்டிக்காட்டினார்.

நோன்பு மாதம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திலிருந்து ஹரிராயா நெருங்கும்வரை சட்டவிரோதமாக மான் வேட்டையாடும் நடவடிக்கை நடைபெற்றது. மிகவும் அறிமுகமானவர்களுக்கு மட்டுமே மான் இறைச்சியை சமைத்து பரிமாறும் வழக்கத்தை பலர் கொண்டிருந்தனர். அதோடு விழாக்காலத்தில் மான் இறைசியை கவர்ச்சிகரமான விலையில் விற்பனை செய்வதற்கு பலர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியதையும் தாங்கள் கண்டறிந்ததாக Abdul Kadir கூறினார். இதனிடையே பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் அழிந்துபோகாமல் இருப்பதை தடுப்பதற்கு சட்டவிரோதமாக வேட்டையில் ஈடுபடுவர்கள் குறித்தை தகவல்களை வழங்குவதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!