Latestமலேசியா

வீட்டுக் காவலுக்கான நஜீப்பின் வழக்கு மனு ஏப்ரல் 17ஆம்தேதி விசாரணை

கோலாலம்பூர், ஏப் 4 – தம்மை வீட்டுக் காவலில் தண்டனை அனுபவிக்க அனுமதித்த முன்னாள் பேரரசரின் துணை உத்தரவை அமல்படுத்துவதற்கு அரசாங்கத்தை கட்டாயப்படுத்துவதற்கு டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் வழக்கு மனு மீதான விசாரணை ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெறும். தமது வழக்கு மனுவுக்கு கூடுதலான ஆதரவுக்கான எழுத்துப்பூர்வமான சத்திய பிரமான வாக்குமூலத்தை நஜீப் சமர்ப்பிக்க விரும்புவதாக அவரது வழக்கறிஞரான Shaffe Abdullah நீதிபதி Amarjeet Shingh கிடம் தெரிவித்துள்ளார். எனினும் அந்த எழுத்துப்பூர்வமான வாக்குமூலம் இப்போது மலேசியாவில் இல்லையென்றும் நோன்பு பெருநாளுக்குப் பின் தாம் லண்டனிலிருந்து மலேசியா திரும்பிய பின்னரே அதனை சமர்ப்பிக்க முடியும் என Shafee தெரிவித்தார்.

விசாரணக்காக முன்கூட்டியே தேதியை நிர்ணயிப்பதற்காக அந்த எழுத்துப் பூர்வமான வாக்குமூலத்தை வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்க வேண்டுமென முதிர்நிலை கூட்டரசு வழக்கறிஞர் Ahmad Hanir Hambaly தெரிவித்தார். அப்போதைய பேரரசர் Sultan Abdullah Sultan Ahmad Shah , தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஜனவரி 29 அன்று நடந்த மன்னிப்பு வாரியக் கூட்டத்தின் போது வீட்டுக் காவலில் தம்மை வைப்பதற்கு அனுமதிக்கும் துணை உத்தரவை பிறப்பித்தார் எனறு நஜீப் தெரிவித்தார். பிப்ரவரி 2ஆம்தேதி கூடிய கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியம் நஜிப்பின் SRC இன்டர்நேஷனல் Sdn Bhd வழக்கில் 12 ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டாக அவரது சிறைத்தண்டனையை குறைத்ததோடு 210 மில்லியன் ரிங்கிட் அபராத தொகையை 50 மில்லியன் ரிங்கிட்டாக குறைத்தது.

எனினும் அந்த கூடுதல் துணை உத்தரவு பிப்ரவரி 2ஆம்தேதியன்று மன்னிப்பு வாரியம் அறிவிக்கவில்லையென நஜீப் தமது வழக்கு மனுவில் கூறியுள்ளார்.
தற்போது காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நஜீப் 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம்தேதியன்று விடுதலை செய்யப்படுவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!