Latestமலேசியா

வெங்காயம் ஏற்றிவந்த கொள்கலன் லோரியில் ரி.ம 10.03 மில்லியன் கொக்கொய்ன் கடத்தல் முறியடிப்பு

ஜோகூர் பாரு, மே 28 – வெங்காயம் ஏற்றப்பட்ட கொள்கலன் லோரியில்
10.03 ரிங்கிட் மதிப்புடைய 51 கிலோகிரேம் கொக்கெய்ன் போதைப் பொருள் கடத்திய அனைத்துலக போதைப் பொருள் கும்பலின் நடவடிக்கையை ஜோகூர் சுங்கத்துறை முறியடித்தது. தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து Tanjung Pelapas துறைமுகத்தில் சுங்க பரிசோதனை மையத்தில் அந்த கொள்கலனை சுங்க அதிகாரிகள் குழு பறிமுதல் செய்ததாக ஜோகூர் சுங்கத்துறையின் இயக்குநர் Aminul Izmeer கூறினார். அந்த கொள்கலன் லோரியில் ஏர்கண்டிசன் பகுதியில் 2,900 பொட்டலங்களைக் கொண்ட புதிய வெங்காயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையின்போது 50 பொட்டலங்களில் வெள்ளை நிறத்திலான தூள் ஏர் கண்டிசன் Kompesor இருக்கும் பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்தது. பின்னர் பரிசோதனைக்குப் பின் அந்த பவுடர் கொக்கெய்ன் போதைப் பொருள் என்பதோடு சீனாவிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுகிறது. ஜோகூர் சுங்கத்துறை பறிமுதல் செய்த பெரிய அளவிலான போதைப் பொருள் இதுவாகும் என Aminul Izmeer தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!