![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-01-Dec-2023-11-05-AM-1128.jpg)
கோலாம்பூர், டிச 1 – பல்வேறு குற்றங்களில் சம்பந்தப்பட் எழுவர் வெளிநாடுகளில் தலைமறைவாக இருப்பதால் அவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய இரண்டு வலைத்தள எழுத்தாளர்களான ராஜா பெட்ரா கமருதீன் மற்றும் ஆல்வின் தான் அல்லது தான் ஜே யீ ஆகியோரும் இவர்களில் அடங்குவர். மேலும் தவறான போதனையாளரான ‘Si hulk’ அல்லது சுஹைனி முஹம்மட் , அழகு சாதன தொழில் அதிபர் முஹம்மட் சஜ்ஜாத் கமருஸ்ஸாமான் அல்லது நூர் சஜாட் , மற்றும் மங்கோலிய மாடல் அழகி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு ஆஸ்திரலியாவுக்கு தப்பியோடிய சிருல் அஸ்ஹர் உமர் ஆகியோரும் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.