![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-28-Mar-2024-10-08-AM-1637.jpg)
போர்ட்டிக்சன், மார்ச் 28 – வேனில் இருந்து கீழே விழுந்ததால் கடந்த 10 நாட்களாக உயிருக்கு போராடிவந்த மூன்று வயது சிறுமி மரணம் அடைந்தது தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக அந்த சிறுமியின் தாயின் காதலன் என நம்பப்படும் ஆடவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். வாகனத்திலிருந்து கீழே விழுந்ததால் அந்த சிறுமி போட்டிக்சன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மார்ச் 24ஆம் தேதி இரவு மணி 10.05 அளவில் Teluk Kemang போலீஸ் நிலையத்திலிருந்து புகாரை பெற்றதாக Port Dickson மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Aidi Sham Muhamed தெரிவித்தார். மார்ச் 15ஆம் தேதி இரவு மணி 8.30 அளவில் ஒரு கடைக்கு அருகே வேன் நின்றதாகவும் அதன் கதவை 38 வயது ஆடவர் திறந்தபோது அந்த சிறுமி கீழே விழுந்ததாக கூறப்பட்டது.
உடலின் பல பகுதிகளில் காயத்திற்குள்ளான அந்த சிறுமி சிரம்பான் Tuanku Jaafar மருத்துவமனையில் நேற்று மாலை மணி 6.04 அளவில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அதன் மரணத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் ஆடவன் நேற்றிரவு 8.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக Aidi Sham கூறினார். அந்த ஆடவன் ஏற்கனவே நான்கு குற்றச்செயல்களில் தொடர்பு உள்ளவன் என்றும் தெரிவிக்கப்பட்டது.