Latestஉலகம்

ஸ்பெயினில், உணவக கூரை இடிந்து விழுந்தது ; நால்வர் பலி, 21 பேர் படுகாயம்

மாட்ரிட், மே 24 – ஸ்பெயினின் பிரபல சுற்றுலாத் தீவான மல்லோர்காவிலுள்ள (Mallorca), உணவகம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், நால்வர் உயிரிழந்த வேளை ; இதர 21 பேர் பாடுகாயம் அடைந்தனர்.

அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் என அந்நாட்டின் அவசர சேவை பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களில், எழுவரின் நிலை கவலைக்கிடமாக உள்ள வேளை ; எஞ்சிய ஒன்பது பேர் படுகாயத்திற்கு இலக்காகி இருப்பதாக அவசர சேவை பிரிவு தனது X சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.

அந்த இரண்டு மாடி கட்டட இடிபாடுகளில், இன்னும் யாரேனும் சிக்கிக் கொண்டுள்ளனரா என்பதை கண்டறிய, தேடி மீட்கும் பணிகள் தொடர்கின்றன.

இந்நிலையில், அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!