![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/download-2.jpeg)
கோலாலம்பூர், ஜூன் -9 – இவ்வாண்டு அக்டோபரில் நடைபெறவிருக்கும் பெர்சாத்து கட்சித் தேர்தலில் அதன் தலைவர் பதவி போட்டியிடப்படாது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக, பெர்சாத்து பொதுச் செயலாளர் Datuk Seri Hamzah Zainuddin கூறினார்.
வரும் கட்சித் தேர்தலில் Tan Sri Muhyiddin Yassin தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என, கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சிறப்பு ஆண்டு பொதுப் பேரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஏற்ப அது அமைவதாக அவர் சொன்னார்.
தேசியத் துணைத் தலைவர் உள்ளிட்ட மற்ற எல்லா பதவிகளுக்கும் கட்சியின் அமைப்பு விதிகளுக்கு ஏற்ப தேர்தல் நடத்தப்படும் என்றார் அவர்.
இவ்வேளையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவு தெரிவித்த பெர்சாத்து மக்கள் பிரதிநிதிகள் 7 பேர் மீதான அடுத்தத் கட்ட நடவடிக்கை குறித்தும் உச்சமன்றக் கூட்டத்தில் பேசப்பட்டது.
நீண்ட நாட்களாக இழுபறியில் போய்க் கொண்டிருந்த நிலையில், பெர்சாத்து கட்சியில் அவர்களின் உறுப்பியம் ரத்தானதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.