கோலாலம்பூர் நவ 22 – அடுத்த ஆண்டில் அரசாங்க வசதிகளைக் கொண்ட இடங்களில் முதியோர் பராமரிப்பு மையங்களை தொடங்குவதற்கு மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அதன் அமைச்சர் நான்சி ஷுக்ரி தெரிவித்தார். குறைந்த கட்டணத்தில் செயல்படும் இந்த மையங்களில் அரசாங்க பணியாளர்கள் குறிப்பாக பெண்கள் தங்களது வயதான குடும்ப உறுப்பினர்களை இங்கு தங்கவைக்க முடியும். அரசு சேவையில் உள்ள பெண்கள் தங்களது வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்தவும் இந்த முதியோர் மையங்கள் பெரும் உதவியாக அமையும் என அவர் கூறினார். வயதான குடும்ப உறுப்பினர்களை பராமாரிப்பதற்காக அரசு சேவையிலிருந்து பெண்கள் விலகுவதை தடுக்கும் நோக்கத்தில் அமைச்சின் ஏற்பாட்டில் முதியோர் இல்லங்கள் திறக்கப்படும் என நான்சி ஷுக்ரி கூறினார்.