பெட்டாலிங் ஜெயா, டிச 15 – கடந்த சில வாரங்களாக மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், பொதுமக்கள் மைசெஜாத்ரா செயலியை பயன்படுத்துவதை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என சுகாதார அமைச்சை, முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடினும் ஓங் கியான் மிங்கும் இணைந்து வலியுறுத்தியுள்ளனர்.
கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான தரவுகளையும், நோய் தொற்று கண்டவர்களின் தகவல்களை அறிந்துகொள்ளவும் மை செஜாத்திரா செயலியைப் அரசாங்கம் பயன்படுத்த முற்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
அண்மைய கோவிட் 19 தரவுகளின் மூலம் டிசம்பர் 9ஆம் தேதி வரை சுமார் 12,757 தொற்று கண்ட பதிவு செய்யப்பட்டுள்ளது. 88 விழுக்காடு தொற்று சம்பவங்கள் அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது.
மேலும், தடுப்பூசி விவகாரம் தொடர்பில் மலேசிய சுகாதார அமைச்சு, நிதியமைச்சுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.