கோலாலம்பூர், நவ 30 – பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராமியை கொலை செய்பவர்களுக்கு 5 மில்லியன் ரிங்கிட் சன்மானம் வழங்கப்படும் என டிக் டோக்கில் அறிவித்த நபர் வேடிக்கைக்காக அவ்வாறு செய்ததாக போலிஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேய்ன் தெரிவித்திருக்கிறார்.
கைது செய்யப்பட்ட அந்த 34 வயது ஆடவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது அவர் தற்போதுதான் டிக் டோக் பயன்படுத்த தொடங்கியது தெரிய வந்ததாக ரசாருடின் கூறினார்.
வேடிக்கைக்காக தான் அவ்வாறு செய்ததாக அந்த ஆடவன் கூறியிருக்கிறான். விசாரணை முடிந்து அதன் அறிக்கை சட்டத்துறை அலுவலகத்திடம் டிசம்பர் 4ஆம் திகதி மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட விருப்பதாக அவர் கூறினார்.
டிக் டோக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த வீடியோ தற்போது அகற்றப்பட்டிருக்கிறது.