![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-14-Jun-2024-02-13-PM-4879.jpg)
ஃபுளோரிடா, ஜூன்-14, அமெரிக்கா, ஃபுளோரிடாவில் கடந்தாண்டு செப்டம்பரில், பெண்ணொருவரை 14 அடி நீளமுள்ள முதலை வேட்டையாடியப் பிறகான தருணங்களைக் காட்டும் காணொலி வெளியாகி பார்ப்போரின் நெஞ்சைப் பதற வைக்கிறது.
ஃபுளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட அக்கேமரா பதிவில், சம்பவ இடமான சாலையோர கால்வாய் பகுதியில் வந்திறங்கும் போலீசார் அந்த ராட்சத முதலையைச் சுட்டுக் கொல்வதைக் காண முடிகிறது.
பிறகு கயிற்றாலும் சங்கிலியாலும் கட்டி கால்வாயில் இருந்து முதலையை வெளியே கொண்டு வந்து, அதனை அறுத்து அதன் வாயில் சிக்கியிருந்த பெண்ணின் எஞ்சிய உடல் பாகங்களை அவர்கள் மீட்டனர்.
முதலையின் வாயில் ஏதோ மனித உடல் போல் இருப்பது கண்டு அதிர்ந்துப் போன ஒரு வழிபோக்கர் தான் முதலில் போலீசுக்குத் தகவல் கொடுத்தார்.
முதலையால் வேட்டையாடப்பட்ட 41 வயது பெண், வீடற்றவர் என்றும் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து 50 அடி தூரத்தில் தற்காலிக படுதா முகாமில் வசித்து வந்தவர் என்றும் கண்டறியப்பட்டது.