கோலாலம்பூர், பிப் 19 – அம்பாங் தாமான் பண்டான் மேஷ்ராவில்; மேஷ்ரா வில்லாவில் ஒரு பெண்மணிக்கு சொந்தமான நகையை திருடியதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டைச் சேர்ந்த 26 மற்றும் 38 வயதுடைய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். முதல் சந்தேகப் பேர்வழி பிப்ரவரி 12 ஆம் தேதி தாமான்பண்டான் மேஷ்ராவில் மாலை மணி 6.30 அளவில் கைது செய்ப்பட்டதாகவும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பிப்ரவரி 14ஆம் தேதி இரவு மணி 8.45 அளவில் இரண்டாவது சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா OCPD துணை கமிஷனர் மோஹட் ஆசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
முதல் சந்தேகப் பேர்வழி நகையை பறிகொடுத்த 56 வயது பெண்மணிக்கு உறவினர் என்பதோடு திருடப்பட்ட நகையை வாங்கிய இரண்டவது சந்தேகப் பேர்வழி சமையல்காரர் என அவர் கூறினார். தனது படுக்கை அறையின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த தனது தங்க பிரெஸ்ட்லெட் காணாமல்போனதை அந்த பெண் உணர்ந்துள்ளார். அதன் பின் போலியான Neclace அங்கு வைக்கப்பட்டதை உணர்ந்ததோடு 30,000 ரிங்கிட் மதிப்புள்ள தனது நகை காணாமல்போனதாக அவர் புகார் செய்ததாக மோஹட் ஆசாம் தெரிவித்தார்.