![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/01/MixCollage-08-Jan-2024-01-35-PM-8879.jpg)
கோலாலம்பூர். ஜன 8 – ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக பெரிக்காத்தான் நேசனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் சத்திய பிரமான பிரகடனத்தில் கையெழுத்திடவில்லையென Bersatu கட்சியின் இளைஞர் பிரிவின் தலைவர் வான் அகமட் ஃபாய்சல் தெரிவித்திருக்கிறார்.
பெரிக்காத்தான் நேசனலின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சத்திய பிரமான பிரகடனத்தை நாங்கள் திரட்டவில்லை. எங்களது உறுப்பினர்களின் ஐவரின் ஆதரவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பெற்றிருக்கும்போது அவர்கள் இது குறித்து உணர்ச்சி வசப்படுவதும் மற்றும் கேள்வியெழுப்புவதும் ஏன் என்று வான் அகமட் ஃபாய்சல் வினவினார்.