கோலாலம்பூர், ஜன 18 – அரசாங்க தலைமைச் செயலாளர் சுகி அலி மீது விசாரணை நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் வெளியான தகவல் பொய்யானது என எம்.ஏ.சி.சி (MACC)-யின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்தார். பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் சுகி அலி மீது விசாரணை நடத்தப்பட்டதாக சுகியின் அலுவலகம் உறுதிப்படுத்தியதாக டுவிட்டர் பயனர் ஒருவர் கூறியிருந்தார். முக்கிய வழக்குகளில் சம்பந்தப்பட்டது, பல வீடுகள் , ஆடம்பர கார்கள் மற்றும் சொத்துக்கள் வைத்திருப்பது தொடர்பில் சுகி அலி மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என அசாம் பாக்கி விளக்கம் அளித்தார்.