Latestவிளையாட்டு

ஆசிய கிண்ண காற்பந்து போட்டி கடைசி நேர கோலினால் பஹ்ரெய்னிடம் மலேசியா தோல்வி

கோலாலம்பூர், ஜன 22 – கத்தாரில்  நேற்றிரவு நடைபெற்ற  ஆசிய கிண்ண காற்பந்து போட்டியில்  E பிரிவுக்கான இரண்டாவது ஆட்டத்தில்  ஆட்டம்  முடிவடைவதற்கு கடைசி நிமிடத்தில் பஹ்ரெய்ன் அடித்த கோலினால் மலேசியா 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டு பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியது.  இந்த ஆட்டத்தில் பஹ்ரெய்ன் குழுவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஹரிமாவ் மலாயா குழுவினர் விளையாடிய போதிலும் கடைசி வினாடியில் கிடைத்த கார்னர் கிக் மூலம் ஒரு கோலை அடித்து பஹ்ரெய்ன் வெற்றி பெற்றது.  ஏற்கனவே  தொடக்க ஆட்டத்தில் ஜோர்டான் குழுவிடம்   0-4  என்ற கோல் கணக்கில்  தோல்வி  கண்டதால் இரண்டாவது சுற்றுக்கு தேர்வு பெறும் வாய்ப்பை மலேசியா இழந்துவிட்டது.   மலேசியா தனது கடைசி ஆட்டத்தில் வியாழக்கிழமையன்று தென் கொரியாவுடன் மோதவிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!