கோலாலம்பூர், டிசம்பர் 29 – தனது மின்னியல் சாதனங்களில், ஆபாச பதிவுகளை வைத்திருந்த, 32 வயது “ஆன்லைன்” ஆடை விற்பனையாளர் ஒருவனுக்கு, கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று மூவாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து தீர்பளித்தது.
தம்மிடம் இருந்த மடிக்கணினியிலும், எட்டு கைப்பேசிகளிலும், ஆபாச உள்ளடக்கங்களை வைத்திருந்த குற்றச்சாட்டை, வோங் யி ஹாங் எனும் அவ்வாடவன் ஒப்புக் கொண்டதை அடுத்து, மாஜிஸ்திரேட் அந்த தண்டனையை விதித்தார்.
கடந்த மே மாதம் 22-ஆம் தேதி, மாலை மணி 4.30 வாக்கில், செராஸ், தாமான் கோபேனாவிலுள்ள, ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், அவன் அக்குற்றத்தை புரிந்துள்ளான்.
அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில், அவன் மூன்று மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
எனினும், அவ்வாடவன் தமக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை இன்று செலுத்திவிட்டான்.