உலகம்மலேசியா

ஆம்புலன்ஸ் வண்டியை பின் தொடர்ந்து அமைச்சரின் எம்.பி.வி வாகனம் செல்வதா?நெட்டிசன்கள் கொதிப்பு

கோலாலம்பூர், பிப் 5 – மெந்தரி என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சின்னத்துடன் அமைச்சரின்  எம்.பி.வி சொகுசு வாகனம்  ஒன்று போக்குவரத்து விதிகளை மீறி ஆம்புலன்ஸ் வண்டியை  பின்தொடர்ந்து சென்றது குறித்து நெட்டிசன்கள் கொதிப்படைந்துள்ளனர். அந்த வாகனம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. முகநூல் பதிவின் ஸ்கிரீன்ஷாட்டில் தற்போது X சமூக வலைத்தளத்தில் வைரலாகிவரும் அந்த காணொளியில் வெளியான காட்சி பேரா, சிம்பாங் பூலாய் மற்றும் தாப்பாவில் வடக்கு – தெற்கு நெடுஞ்சாலைக்கிடையில் நடந்துள்ள சம்பவத்தை கொண்டது என சமூக ஊடக பயனர் ஒருவர் தெரிவித்தார். 

சிம்பாங் பூலாயிலிருந்து தாப்பாவிற்கு செல்லும் அந்த சாலையில் ஒரு விபத்து காரணமாக அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததோடு தாப்பாவிலிருந்து சிம்பாங் பூலாய்க்கு செல்வதற்கு ஆறு மணி நேரம் பிடித்தது. அமைச்சரின் வாகனம் ஆபத்து அவசரத்தின் காரணமாக  ஆம்புலன்ஸ் வண்டியை பின்தொடர்ந்து சென்றதா என்றும் சமூக வலைத்தலவாசிகள் வினவினர்.  அமைச்சரின் எம்.பி.வி வாகனத்தை  பின்தொடர்ந்து சென்ற  அந்த வாகன ஓட்டுனரின் நெறிமுறைகளை எவரும் பாதுகாக்கக்கூடாது  என மற்றொரு நெட்டிசன் வலியுறுத்தினார். அந்த எம்.பி.வி காரின் உரிமையாளரை அம்பலப்படுத்தும்படி மற்றொரு பயனரான உணவு உரிமையாளர் இக்பால் நசீர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!